Wednesday, June 5, 2019

வாழ்க்கை வாழ்வதற்கே 2

சிறுகதை 2



''விதி'' அப்படினா? கடவுள் இல்லையானு சொல்லுறவன் வாழ்க்கையில் கூட விதியின் விளையாட்டு இருக்கும். அதே விதி ஆனந்தின் வாழ்க்கையிலும் விளையாடுகிறது.


(முதல் கதையை படித்துவிட்டு இதை படிங்க )


என்ன ஒரு உறக்கம் விடிந்தது கூட தெரியாமல்  காதில் இளைய ராஜா இசையொலிக்க கனவில் இருந்து எழுந்தான் ஆனந்த். செல்போனின் ஓசைதான் அது கையில் எடுத்து பார்த்தால் தன் காதலி பிரியாவிடம் இருந்து பத்து தவறிய அழைப்புகளும் ஐந்து குறுந்தகவல்  வந்திருந்தது (பதறுவதற்கு ஒன்றுமில்லை காதலி என்றாலே அப்படித்தானே ) எழுந்தயுடன் காலைக்கடனை முடித்துக்கொண்டு, படுக்கையில் ஓரமாக கிடந்த கேமராவை எடுத்து, அதை அலுமாரியில் வைப்பதற்க்காக சென்றான். இருந்தும் நேற்று மலை எடுத்த படங்களை  பார்க்க ஆசைப்பட்டான் உடனே
கணினியில் இணைத்து, படங்கள் ஒவ்வன்றக பார்க்க  ஆரம்பித்தான் மனதுக்குள் பெருமிதம் அத்தனையும் அழகாக தெரிந்தது' தனக்கு தானே பெருமிதமாக பேசிக்கொண்டு தனது காதலி பிரியாவுக்கு போன்  போட்டான்  காதலியின் காலை கோவத்தை தணிக்க கேசும் தமிழில் கொன்சிய பின், முந்தைய நாள் மலை நடந்தவற்றை சொன்னான் அவனது ஏக்கங்கள் ,திறமை, எதிர்பார்ப்பு,  எல்லாவற்றையும் சொன்னான் பிரியாவுக்கே ஆனந்த் புதியவனாக பேசில் தெரிந்தது.

அதே திறமையை அன்றய வியாபாரத்திலும் காட்டினான் நல்ல வருமானம் இப்போது அவனால் புகைப்பட காலை கல்லூரிக்கு சென்றே ஆகவேண்டும் என உள்ளுணர்வு தூண்டியது இரண்டு நாள் கழித்து அவன் ஏதிர் பார்த்த அந்த நாள் வந்தது தலைநகர் கொழும்பு என்றாலே ஆனந்தத்துக்கு ஒரு நடுக்கம் வாழ்வில் இரண்டுமுறைத்தான் கொழும்புக்கு சென்றுருக்கிறான், இருந்தும் பிரியா கொழும்பிலே ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலை செய்கிறாள் அவளை பார்ப்பதற்கும் இது ஒரு சந்தர்ப்பம் .
என்பதை புரிந்துகொண்டு ஒருநாள் முன்பதாகவே ஆயத்தமானான் ஆனந்த். அன்றிரவு ஏழு  மணியளவில் பஸ் ஏறினான் கையில் பணமும் தேவைக்கு அதிகமாகவே எடுத்து சென்றான் தலைநகரம் புதிது எண்பத்தும் காதலியை பார்க்கவும் போகிறான் என்பதால்தாலும்  விடியற்காலை நான்கு மணிக்கே இருநூறு (கி.மீ) துறை பிரயாணம் முடிய தலைநகருக்கு வந்தடைந்தான்

 உள்ளூர் பஸ் ஆறு மணிக்குத்தான்  தரிப்பிடத்தில் இருந்து புறப்படுமென தெரிந்ததும் , அந்த இரண்டுமணிநேரம் நரகமானது காரணம், தெரிந்தவர்கள் இல்லை ,புதிய இடம் ,நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் இல்லை ,மனது பட பட த்தலும் பிட்டகொட்டுவ பஸ் தரிப்பிடத்தில் இருந்த தேநீர் கடையில் அமர்ந்து கல்லூரிக்கு போக்கும் பஸ்ஸை கேட்டு தெரிந்துகொண்டு அதில் ஏறி கல்லூரி பெயரை சொல்லி  அந்த இடம் வந்ததும் இறக்கிவிருமாறு காண்டெக்ட்டரிடம் சொல்லிவிடு ஓரமாய் கிடைத்த இருக்கையில் அமர்ந்தான் ஒருவழியாக வரவேண்டிய இடத்துக்கு வந்தால் பிரச்சினை முடியுமென நினைத்தால் காலை பத்து மணிக்குத்தான் கல்லூரி திறக்க படுமாம் (ஆனந்த் ,ஸ்க்கூல் னு நெனச்சனா காலை ஏழுமணிக்கு ஆரம்பிக்க) எது எப்படியோ கொழும்புக்கு வந்தாச்சு இனியென்ன நினைத்தது நடந்துவிடும்  பெரிய புகைப்படக்கலைஞ்சனாகி விடலாம் னு நினைப்பில் அருகில் இருந்த பெளவ்த்த விகாரையை நோக்கி நடந்தான் காலை மணி ஆறு இருப்பது பிரயாண களைப்பு ஓய்வு தேவை என்பதை உணர்ந்த ஆனந்த் அங்கிருந்த புத்த கோவிலுக்கு சென்று புத்த பிக்குவிடம் தான் வந்த கரந்தை சொன்னான் பிக்குவும் இங்கே அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்ளப்ப என சொல்ல அங்கிருந்த ஓய்வு மடத்தில்  ஓரமாக படுத்துறங்க ஆரம்பித்தான் தூக்கம் வரவில்லை மணி எட்டுதான் ஆகிறது முகத்தை கழுவிக்கொண்டு புதிய அனுவலாக ஆடையை அணிந்துகொண்டு நகரை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தான் உயந்த கட்டிடங்கள், வாகன விரிசல், மக்கள் கூட்டம் ,அளவுக்கு அதிகமான வெப்பம், என எல்லாமே ஆனந்துக்கு புதிதாக தெரிந்தது அவன் வாழ்ந்த பசுமை கேசும் இயற்கை அழகு இந்த நகரில் இல்லை அனால் இதுவும் அழகுதான் ஒருவழியாக மணி பத்து ஆனது புகைப்பட கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்
ஆர்வத்துடன்


தொடரும்
வாழ்கை வாழ்வதற்கே  3  

No comments:

Post a Comment

வாழ்க்கை வாழ்வதற்கே 2

சிறுகதை 2 ''விதி'' அப்படினா? கடவுள் இல்லையானு சொல்லுறவன் வாழ்க்கையில் கூட விதியின் விளையாட்டு இருக்கும். அதே விதி ஆனந...